போதைப்பொருள் மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கவுதம், சென்னையை சேர்ந்த கோகுல், திருவனந்தபுரம் திருமலையை சேர்ந்த விஷ்ணு உதயா ஆகியோரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் ஏப்ரல்.25ம் தேதி அன்று கோவைப்புதூர், குளத்துப்பாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள சோப் கம்பெனி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 7.5 கிராம் போதை பொருள், 170 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் (வயது 27), ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கவுதம் (வயது 27), சென்னை கோகுல் (வயது 23), திருவனந்தபுரம் திருமலையை சேர்ந்த விஷ்ணு உதயா ( வயது 24) என்பது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடமிருந்த போதைப் பொருள், கஞ்சா, 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நான்கு பேரையும் கோவை சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் (வயது 27), ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கவுதம் (வயது 27), சென்னை கோகுல் (வயது 23), திருவனந்தபுரம் திருமலையை சேர்ந்த விஷ்ணு உதயா ( வயது 24) என்பது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடமிருந்த போதைப் பொருள், கஞ்சா, 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நான்கு பேரையும் கோவை சிறையில் அடைத்தனர்.