கோவை ஆர்.எஸ்.புரத்தில் பைனான்ஸ் தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பைனான்ஸ் தொழிலதிபரிடம் 1200 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற கோவை ரத்தினபுரி அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை துடியலூரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(33). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஏப்ரல்.26 தனது நண்பர் ஒருவரை பார்க்க ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1200ஐ பறித்து தப்பி செல்ல முயன்றார்.

பின் கார்த்திகேயனின் சத்தம் கேட்டு அங்கு சிலர் ஓடி வந்தனர். அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி ‘‘நான் இந்த ஏரியாவில் பெரிய ரவுடி’’ என கூறி அந்த வாலிபர் தப்பி சென்றார். இது குறித்து கார்த்திகேயன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் பணம் பறித்தது கோவை ரத்தினபுரி அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ்(34) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...