உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி கிராம உதவியாளர் சித்ரா அதிரடியாக சஸ்பெண்ட்

கிராம நிர்வாக அலுவலர் தற்கொலைக்கு நீதிகேட்கும் போராட்டம் வலுத்ததையடுத்து உடுமலை வட்டாட்சியர், கணக்கம்பாளையம் ஊராட்சி கிராம உதவியாளராக பணியாற்றி வந்த சித்ராவை சஸ்பெண்ட் செய்தார். அவரது வீட்டின் முன்பு சஸ்பெண்ட் உத்தரவு நகல் ஒட்டப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் கருப்புசாமி கடந்த 23ஆம் தேதி கூலநாயக்கன் பெட்டியில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோமங்கலம் காவல்துறையினர் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர்.



இந்த நிலையில் 24-ஆம் தேதி கருப்புசாமி தன் கைப்பட எழுதிய மரண வாக்குமூலம் கடிதத்தை உறவினர்கள் இளவரசன் கோகுல் சந்துரு ஆகியோர் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் வாங்கினர்.

கருப்புசாமியின் மரண வாக்குமூலம் கடிதம் கிடைத்த நிலையில் கோமங்கலம் காவல்துறையினர் தற்கொலை வழக்கை மாற்றி தற்கொலைக்கு தூண்டுதல் என மாற்றி பதிவு செய்தனர். இந்த நிலையில் மரண வாக்கு மூலத்தில் கருப்புசாமி தன் சாவுக்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருந்த கிராம உதவியாளர் சித்ரா, மக்கள் மித்ரன் மணியன் தான் காரணம் என எழுதி இருந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்புச்சாமியின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தற்சமயம் உடுமலை வட்டாட்சியர் கணக்கம்பாளையம் ஊராட்சி கிராம உதவியாளராக பணியாற்றி வந்த சித்ராவை சஸ்பெண்ட் செய்து அவரது வீட்டின் முன்பு சஸ்பெண்ட் உத்தரவு நகல் ஒட்டப்பட்டது. மேலும் கோமங்கலம் காவல் துறையினர் கருப்புசாமியை தற்கொலைக்கு தூண்டிய இருவரை தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...