தாராபுரத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை

உயிரிழந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தகவல் தெரியவில்லை. இவரை பற்றி தகவல் தெரிந்தால் தாராபுரம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு அருகே அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடைப்பதாக தாராபுரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சையது சம்பவ இடத்திற்கு சென்று அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.



மேலும் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை. அவர் சட்டை பையில் அடையாளம் தெரியாத ஆண் நபர் பழனியில் இருந்து தாராபுரம் வருவதற்காக பேருந்தில் பயணம் செய்துள்ளார். தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி அவர் 5 சாலை சந்திப்பு அருகே வந்து டீக்கடையில் டீ அருந்து விட்டு அதிக அளவில் வெயிலின் தாக்கம் காரணமாக சாலையோரமாக அமர்ந்தவர் அப்படியே உயிர் இழந்ததாக தாராபுரம் காவல்துறை சார்பில் கூறுகின்றனர்.

மேலும் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தகவல் தெரியவில்லை. இவரை பற்றி தகவல் தெரிந்தால் தாராபுரம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...