தாராபுரத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் தலைமையில் ஐடிஐ கார்னர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் தகவல் கூறியதை தொடர்ந்து இரண்டு நபர்களையும் அழைத்துச் சென்று தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி கீரனூர் பகுதியைச் சேர்ந்த ராம்பாலி என்பவரது மகன் தேவேஷ் ராஜக் வயது 32 என்பதும், மற்றொருவர் தாராபுரம் கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாதிக் என்பவரது மகன் யாசர் ஆர்பத் வயது 20 என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...