தாராபுரத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் தலைமையில் ஐடிஐ கார்னர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் தகவல் கூறியதை தொடர்ந்து இரண்டு நபர்களையும் அழைத்துச் சென்று தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி கீரனூர் பகுதியைச் சேர்ந்த ராம்பாலி என்பவரது மகன் தேவேஷ் ராஜக் வயது 32 என்பதும், மற்றொருவர் தாராபுரம் கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாதிக் என்பவரது மகன் யாசர் ஆர்பத் வயது 20 என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...