பொள்ளாச்சி கோடங்கிபட்டியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் கல்வி விழிப்புணர்வு மற்றும் சமுதாய ஒத்துழைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஓமனா தலைமை வகித்தார். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட கள அலுவலர் நம்பிராஜன் அனைவரையும் வரவேற்றார். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் ஜெயக்குமார், அறிவொளி வீராசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவிஞர் அம்சப்பிரியா கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறப்பு பயிற்சி மையக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசும்போது; காலங்காலமாக ஏழை, எளிய குடும்பத்தை சார்ந்த குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது. குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு திட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டங்களின் பயனாக இன்று ஏழைக் குடும்பங்களை சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி கிடைத்துள்ளது. கல்வி என்பது வெறுமனே பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது அல்ல. பொது இடங்களையும், பொதுச் சொத்துக்களையும் பாதுகாப்பதும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் கற்றுத்தரப்பட வேண்டும். எந்த நாட்டில் பெண் குழந்தைகள் பாதுகாக்கப்படுகிறார்களோ அங்கு தான் அனைவரும் நலமாக, வளமாக இருக்க முடியும்.
சமூகத்தில் உள்ள புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இவற்றிற்கு எதிராக குழந்தைகள் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பல்வேறு சமூகத்தை சேர்ந்த தேசத்தலைவர்கள் போராடித்தான் கல்வி கற்கும் உரிமையை கிராமங்கள் தோறும் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். அத்தகைய மதிப்புமிகு கல்விச் செல்வத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கவிஞர் அம்சப்பிரியா வலியுறுத்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர் பத்மாவதி நன்றி கூறினார்.
அப்போது அவர் பேசும்போது; காலங்காலமாக ஏழை, எளிய குடும்பத்தை சார்ந்த குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது. குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு திட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டங்களின் பயனாக இன்று ஏழைக் குடும்பங்களை சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி கிடைத்துள்ளது. கல்வி என்பது வெறுமனே பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது அல்ல. பொது இடங்களையும், பொதுச் சொத்துக்களையும் பாதுகாப்பதும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் கற்றுத்தரப்பட வேண்டும். எந்த நாட்டில் பெண் குழந்தைகள் பாதுகாக்கப்படுகிறார்களோ அங்கு தான் அனைவரும் நலமாக, வளமாக இருக்க முடியும்.
சமூகத்தில் உள்ள புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இவற்றிற்கு எதிராக குழந்தைகள் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பல்வேறு சமூகத்தை சேர்ந்த தேசத்தலைவர்கள் போராடித்தான் கல்வி கற்கும் உரிமையை கிராமங்கள் தோறும் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். அத்தகைய மதிப்புமிகு கல்விச் செல்வத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கவிஞர் அம்சப்பிரியா வலியுறுத்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர் பத்மாவதி நன்றி கூறினார்.