ஊட்டியில் புதிய வரலாற்றை தொட்ட வெப்பம் - 84.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஊட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்துள்ளது. பொதுவாக கோடைகாலத்தில் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஊட்டிக்கு இன்பச்சுற்றுலா செல்லும் நிலையில் தற்போது, ஊட்டியிலேயே வெப்பம் அதிகரித்து வருகிறது.

அதன்படி நேற்று (ஏப்ரல்.28) ஊட்டியில் இதுவரை இல்லாத அளவில் 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் (29 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கு முன் ஊட்டியில் கடந்த 1986ம் ஆண்டு 83 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் இதுவே ஊட்டியில் பதிவான அதிகபட்ச வெப்பம் என்று இருந்த நிலையில், நேற்று ஊட்டி புதிய வரலாற்றை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...