உக்கடம் வாலாங்குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற கோவை மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை

வாலாங்குளத்தின் மேற்கு புறம் முழுவதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து குளத்தின் தண்ணீர் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு குளம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்களும், பொதுமக்களும் மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கோவை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உக்கடம் வாலாங்குளம். இந்த குளம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு குளத்தின் கரையோரம் நடைபாதை செல்வதற்கு ஏற்றவாறு டைல்ஸ்கள் அமைக்கப்பட்டு நடைபாதை செல்வோர் அமர்வதற்கு சிறந்த இட வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த குளத்தைச் சுற்றிலும் சிறிய வியாபார கடைகள், மற்றும் குளிர்சாதன கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் குளத்தின் கரையோரம் பூங்காக்கள் அமைப்பப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.



கிழக்குப்புறம் இவ்வாறு அமைக்கப்பட்ட போதும் மேற்கு புறமாக குளம் முழுவதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து குளத்தின் தண்ணீர் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு குளம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.



எனவே இந்த ஆகாயத்தாமரையை உடனே கோவை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும், அவ்வாறு உடனே அகற்றாத பட்சத்தில் கிழக்கு புறமும் ஆகாயத்தாமரை படர்ந்து குளம் முழுவதும் பரவி விடும். இது இயற்கைக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக இருக்கும். எனவே உடனடியாக இந்த ஆகாயத்தாமரைகளை அகற்றி இதனை சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று ஏப்ரல்.29 கோவை மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...