மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

மடத்துக்குளம் பேரூர் திமுக கழகம் சார்பில், இலவச நீர்மோர் பந்தல் மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் திறக்கப்பட்டது. இதேபோல், உடுமலை கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில், தளி சாலை திருப்பத்தில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் தெற்கு மாவட்டம், மடத்துக்குளம் மேற்கு ஒன்றியம், மடத்துக்குளம் பேரூர் திமுக கழகம் சார்பில், இலவச நீர்மோர் பந்தல் மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் இன்று (ஏப்ரல்.29) துவங்கப்பட்டது.



இதை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி மற்றும் முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் இருந்தனர்.



இதேபோல், உடுமலை கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில், தளி சாலை திருப்பத்தில் நீர் மோர் பந்தல் இன்று (ஏப்ரல்.29) துவங்கப்பட்டது.



இதை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி மற்றும் உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் S.K.M.தங்கராஜ், உடுமலை நகர செயலாளர் S.வேலுச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...