பிரதமர் மோடியை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் தாலியுடன் ஆர்ப்பாட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை திருடி விடுவார்கள் என்பது போல் பேசியிருந்தார். இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் தாலியை ஏந்தி மோடிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


கோவை: ராஜஸ்தான் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை திருடி விடுவார்கள் என்பது போல் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள BSNL அலுவலகம் முன்பு இன்று (ஏப்ரல்.29) கோவை மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தியும், பெண்கள் சிலர் தாலியை ஏந்தியும் மோடி பேசியதற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...