டாட்டா பவர் நிறுவனத்திற்கு எதிர்ப்பு - காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறி செயல்பட்டு வரும் டாட்டா பவர் நிறுவனத்தின் திட்ட பணிகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள மூத்தநாயக்கன்வலசு கிராமத்தில் டாட்டா பவர் நிறுவனம் தென்னிலை, பரமத்தி ஆகிய பகுதிகளில் 300க்கு மேற்பட்ட காற்றாலைகளை அமைத்து மின்சாரத்தை கொண்டு வந்து மூத்தநாயக்கன்வலசில் துணை மின் நிலையம் அமைத்து அங்கிருந்து 20 கிலோமீட்டர் தள்ளி உள்ள தூரம்பாடிக்கு உயர்மின் கோபுரத்தை அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு திட்டமிட்டு வருகிறது.



இந்த உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும்போது விவசாய நிலத்தின் மதிப்பு முழுமையாக பறிக்கப்படும், நிலத்தின் மதிப்பை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகள் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக பறிக்கப்படுவதால் தனியார் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு DTCP, ஊராட்சி மன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார முகமைகளிலும் எவ்வித அனுமதி பெறாமல் நடைபெற்று வந்த பணியை கண்டித்து கடந்த 15-04-2024 நடைபெற்ற தேர்தல் புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தின் போது நிர்வாகத்தின் சார்பில் அனைத்து விதமான அனுமதிகளையும் பெறாமல் பணிகள் தொடங்கப்படாது என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறி தற்போது சட்டவிரோதமாக PAP ஆயக்கட்டு விவசாய நிலத்தில், விவசாயம் அல்லாத பயன்பாடான தொழில் சார்ந்த பணிகளுக்கு, இரும்புகளை கொண்டு வந்து சேகரித்து வைக்கவும், கட்டுமானத்திற்கு தகுந்தார் போல் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறி செயல்பட்டு வரும் டாட்டா பவர் நிறுவனத்தின் திட்ட பணிகளை நிரந்தரமாக தடை செய்திட கோரி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அனைத்து விவசாயிகள், சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், உழவர் போராளிகள் என 200க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...