நெடுஞ்சாலை ஓரம் உள்ள மதுபானக்கடைகளை மூட கடந்த மார்ச் 31-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதிலும் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 3,316 மதுபானக்கடைகள் மூடப்பட்டன. கோவையில் 180க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் மூடப்பட்டன.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் நகரின் முக்கிய இடங்களில் இருந்த பல மதுபானக்கடைகள் மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் பிரியர்கள் சந்துகளுக்குள்ளும், ஊரின் நடுவே இருக்கும் ஒரு சில மதுபானக் கடைகளை நாடினர்.
ஒரு சில இடங்களில் மட்டுமே மதுபானக்கடைகள் இருப்பதால் சரக்குக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது மது பிரியர்கள் வரிசை கட்டி நின்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த திடீர் உத்தரவை தாய்மார்கள் பலர் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.