உடுமலை அருகே முறையான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

முறையான குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாழ்வு சரி செய்து மூங்கில்தொழவு கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யபடும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் தற்காலிகமாக மறியலை மக்கள் கைவிட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மூங்கில் தொழவு ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையில் மூங்கில் தொழுவு கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் வாழ்வு பகுதி பெதம்பம்பட்டியில் உடைந்த உள்ள காரணத்தால் தண்ணீர் முறையாக மூங்கீல் தொழவு கிராமத்தக்கு வருவதில்லை என பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் தெரிவித்து எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்த நிலையில் இன்று ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் வாழ்வு உடனே சரி செய்து மூங்கில்தொழவு கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யபடும் என உறுதி கொடுக்கப்பட்டதால் தற்காலிகமாக பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

உடுமலை அருகே கிராம மக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...