உடுமலை அருகே முறையான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

முறையான குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாழ்வு சரி செய்து மூங்கில்தொழவு கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யபடும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் தற்காலிகமாக மறியலை மக்கள் கைவிட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மூங்கில் தொழவு ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையில் மூங்கில் தொழுவு கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் வாழ்வு பகுதி பெதம்பம்பட்டியில் உடைந்த உள்ள காரணத்தால் தண்ணீர் முறையாக மூங்கீல் தொழவு கிராமத்தக்கு வருவதில்லை என பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் தெரிவித்து எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்த நிலையில் இன்று ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் வாழ்வு உடனே சரி செய்து மூங்கில்தொழவு கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யபடும் என உறுதி கொடுக்கப்பட்டதால் தற்காலிகமாக பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

உடுமலை அருகே கிராம மக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...