குனியமுத்தூரில் ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா திருட்டு

ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா, பிரிண்டர், ஹார்டு டிஸ்க் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் கோஷல் நகரை சேர்ந்தவர் ரிச்சர்ட்சன்(29). இவர் குனியமுத்தூர் பி.கே.புதூரில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி ரிச்சர்ட்சன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் விடுமுறை என்பதால் கடைக்கு செல்லவில்லை.



இந்நிலையில், நேற்று ஏப்ரல்.29 காலை ஸ்டூடியோவின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை சிலர் பார்த்து ரிச்சர்ட்சனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனே விரைந்து வந்து பார்த்தார்.அப்போது உள்ளே இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா, பிரிண்டர், ஹார்டு டிஸ்க் மற்றும்10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் வந்து அங்கு பதிவாகி இருந்த 2 கைரேகை பதிவுகளை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...