கோவையில் அணைகளின் நீர்மட்டம் சரிவு - அணை நீரை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டும் பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை

அணைகளில் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அணை நீரை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குடிநீர் அல்லாத இதர வீட்டு உபயோகத்துக்கு ஆழ்துளைக் கிணற்று நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் உள்ள அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவதால் அணை நீரை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், கோவை மாவட்டத்தின் நீராதாரங்களாக உள்ள சிறுவாணி, பில்லூர், ஆழியாறு அணைகளின் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் மூலமாக மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்க வேண்டிய மாநகராட்சி, நகரையொட்டிய மற்ற ஊராட்சிப் பகுதிகளுக்கு ஜூன் மாதம் வரை 3.50 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆழியாறு அணையின் மொத்தக் கொள்ளளவான 1,050 அடியில் 988.70 அடி நீர் இருப்பு உள்ளது. இது ஜூன் மாதம் இறுதி வரை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் வழங்கிடப் போதுமானதாக உள்ளது. பில்லூர் அணையின் 100 அடியில் 55.25 அடி உயரம் மட்டுமே தண்ணீர் உள்ளது.

இதனால், குடிநீர் அல்லாத வீட்டு உபயோகங்களுக்கு மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு உள்ள 2,649 ஆழ் துளைக் கிணறுகள் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அவசியம் ஏற்படும் பட்சத்தில் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

எனவே, அணைகளில் இருந்து பெறப்படும் நீர்ப்பற்றாக்குறை காரணமாக, அணை நீரை குடிநீர் மற்றும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குடிநீர் அல்லாத இதர வீட்டு உபயோகத்துக்கு ஆழ்துளைக் கிணற்று நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...