பொள்ளாச்சியில் திமுக சார்பில் மே தின ஊர்வலம் - ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உழைப்பாளர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக சார்பில் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மே தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் கோவை சாலை, புதிய திட்ட சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தேர்நிலையம் பகுதியில் நிறைவடைந்தது.



பின்னர் உழைப்பாளர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக சார்பில் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஈஸ்வர சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...