பொள்ளாச்சியில் வாக்கு இயந்திரத்தை பார்வையிட அனுமதி மறுப்பு - போலீசாருடன் திமுக வேட்பாளர் வாக்குவாதம்

வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்றே பின்னரே உள்ளே செல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் போலீசாருடன் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட சென்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி உள்ளிட்ட தலைமை முகவர் ஆகியோரை போலீசார் அனுமதிக்கவில்லை.



வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்றே பின்னரே உள்ளே செல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர்.



இதனால் போலீசாருக்கும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி வாங்கிய பின்னர் திமுக வேட்பாளர் ஈஸ்வர சுவாமி மற்றும் தலைமை முகவர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.



பின்னர் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்கு இந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதாகவும், தேர்தல் ஆணையம் நல்ல பாதுகாப்பு அளித்து இருப்பதாகவும் தெரிவித்த அவர், வாக்கு இயந்திரம் வைக்கபட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும் ஈஸ்வரசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...