தமிழக தபால்காரர் பணிக்கு வடமாநிலத்தவரை மோசடி செய்து தேர்வு செய்ததைக் கண்டித்து கோவையில் தலைமை அஞ்சலகம் முற்றுகை

தமிழகத்தில் தபால்காரர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் மோசடி செய்து வட மாநிலத்தவரை தேர்வு செய்ததாகக் கூறி, கோவையில் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தமிழகத்தில் தபால் துறையில் காலியாக இருந்த 300 தபால்காரர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் மோசடி செய்து வட மாநிலத்தவர்களை தேர்வு செய்ததாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை கூட்ஸ்ஷெட் சாலையில் உள்ள மாவட்ட தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு அவ்வமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது முழக்கங்களை எழுப்பியபடி அஞ்சலகத்திற்குள் நுழைய முயன்றவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தபால்காரர் பணியிடங்களுக்காக நடத்தபட்ட எழுத்துத் தேர்வில் தமிழ் தெரியாத வட மாநிலத்தவர்கள் தமிழ் மொழி தேர்வில் 100-க்கு 90 மதிப்பெண்கள் பெற்று எப்படி தேர்ச்சி பெற்றனர் என கேள்வி எழுப்பிய அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், எழுத்து தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், தேர்வில் குளறுபடி செய்து தமிழர்களின் வேலை வாய்ப்புகள் பறித்து வட மாநிலத்தவர்களுக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதேபோல மத்திய அரசு பணியிடங்களில் தொடர்ந்து தமிழர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தபால்காரர் பணியிட நியமனங்களை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...