சமூக ஊடகங்களில் பரவும் பில்லூர் அணையின் நீர் தடைப்படுவதாகக் கூறும் தகவல்கள் பொய்யானவை

அவசரகால நிலைமையை சமாளிக்க இனி மெயின் குழாயில் வரும் குடிநீரை மேல்நிலை தொட்டியில் ஏற்றி அதே இடத்தில் பொது குழாய்கள் அமைத்து, பொதுமக்கள் நீரை குடிக்க மட்டும் பயன்படுத்த அனைத்து இடங்களிலும் விரைவில் அறிவுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி வதந்தி என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி விளக்கமளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியிலிருந்து அவலாஞ்சி, எமரால்டு, குந்தா அணைகளின் வாயிலாக கெத்தை அணைக்கு தண்ணீர் வந்து, அங்கிருந்து பர்லியாறு நீர்தேக்கம் வழியாக பில்லூர் அணைக்கு நீர் வருகிறது. அதேபோல், கேரளாவில் இருந்து இயற்கையான நீர் வழித்தடங்கள் மூலமும் பில்லூர் அணைக்கு தண்ணீர் வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள சூழலில், பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது.

இதனால் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம் 100 அடி என்றாலும், 40 அடி வரை அணையில் சேறும், சகதியுமாக தான் உள்ளது. 41-வது அடியிலிருந்து தான் நீர் உள்ளது. நேற்றைய நிலவரப்படி பில்லூர் அணையில் 55 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அதாவது, 15 அடிக்கு மட்டுமே நீர் இருப்பில் உள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்ட சப்ளை அடியோடு நிறுத்தப்படலாம், அவசரகால நிலைமையை சமாளிக்க மெயின் குழாயில் வரும் குடிநீரை மேல்நிலை தொட்டியில் ஏற்றி அதே இடத்தில் பொதுகுழாய்கள் அமைத்து, பொதுமக்கள் நீரை குடிக்க மட்டும் பயன்படுத்த அனைத்து இடங்களிலும் விரைவில் அறிவுறுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தி ஒரு வதந்தி என்றும், இதுபோன்று போலி செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...