வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட இன இயக்குனர் மருத்துவர் ராஜசேகரன் ஆய்வு

பிரசவ வார்டு, புற நோயாளிகள் வார்டு, எமர்ஜென்சி வார்டு, ஐசியு வார்டுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றதா? நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கொடுக்கப்படுகின்றதா? என்று மாவட்ட இன இயக்குனர் மருத்துவர் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணியில் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட இன இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதிதாக கட்டப்பட்டு இறுதி நிலையில் உள்ள மருத்துவ புதிய கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற பிரசவ வார்டு, புற நோயாளிகள் வார்டு, எமர்ஜென்சி வார்டு, ஐ சி யு வார்டுகளை முறையாக பராமரிக்கப்படுகின்றதா?.



நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கொடுக்கப்படுகின்றதா?. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகின்றதா? மருந்துகளின் காலாவதி தேதிகள் மற்றும் அனைத்து வார்டுகளின் கழிவறைகள், தண்ணீர் வசதி கிடைக்கிறதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.



புதியதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை உள்ளே நவீன சமையலறை மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து, உணவு கூடம் மற்றும் அனைத்து அறைகளிலும் முழுமையாக சிகிச்சைக்கு வரும் சாமானிய மக்களுக்கு பயன்பாட்டுக்கு உள்ளதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மருத்துவமனையில் காலை 8 மணி மற்றும் மதியம் 2 மணி மற்றும் இரவு 8 ஆகிய நேரங்களில் பணி மாற்றம் செய்து பணிக்கு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் வருகிறார்கள். இந்த சமயங்களில் பணியாளர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வரவில்லை என்று நோயாளிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால நோயாளிகள் காத்து இருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என்று ஆய்வில் தெரிவித்தார்.



புதிய வளாகத்தில் தேவையான உபகரணங்கள் மருத்துவர், செவிலியர், சமையலர், தூய்மை பணியாளர்கள், இரவு காவலர்கள் போன்றவர்களை நியமிக்க வேண்டும் என்று மருத்துவ பணியாளர்கள் தெரிவித்தனர்.

வால்பாறையில் இருக்கக்கூடிய பொதுமக்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டு இன்னும் சில நாட்களில் அனைத்து வசதிகளோடு புதிய மருத்துவமனை கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மாவட்ட இணை இயக்குனர் தெரிவித்தார்.

Newsletter

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...