வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் கால்பந்து போட்டி

கருமலை பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு கால்பந்து போட்டி ஊசிமலை எஸ்டேட் பகுதியில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் மிக பழமையான பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவர்கள் நீதிபதியாகவும், வழக்கறிஞராகவும், மருத்துவராகவும், உயர் அரசு பதவிகளில் வகித்து வருகிறார்கள். இங்கு படித்த மாணவ, மாணவியர்கள் இந்த அறக்கட்டளை தலைவர் எம்.மாதவன், செயலாளர் எஸ்.சிங்கார முத்து, பொருளாளர் பி.ருக்குமணி ஆகியோர்கள் whatsapp குழு மூலம் இணைந்து கருமலை பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை அமைக்கப்பட்டு இந்த அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு ஊசிமலை எஸ்டேட் பகுதியில் கால்பந்து போட்டி நடைபெற்றது.

கால்பந்து போட்டியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர் மருத்துவர் துரைக்கண்ணன் செயலாளர், எஸ்டேட் மேலாளர் செல்வராஜ், அன்பு சேகர் அன்புராஜ், ஊசிமலை எஸ்டேட் ஒர்க்கர்ஸ் கமிட்டி பழனிச்சாமி, வால்பாறை சிடி செல்வகுமார், முகமது கனி, செல்வகுமார், ஆமோஸ் பரமசிவம், சௌந்தர்ராஜ், ஜான் சரவணன் மற்றும் ஊசிமலை முன்னாள் ஆசிரியர் கலைமணி, இந்நாள் ஆசிரியர் உதயகுமார், குட்வின் ஆசிரியர் மற்றும் அமுதா, எஸ்டேட் பொதுமக்கள் கலந்துகொண்டு பெரியவர்கள், குழந்தைகள் என்று கால்பந்து போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கி சிறப்பித்தனர்.



இந்த அறக்கட்டளையின் தலைவர் மாதவன் கூறுகையில் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி இந்த முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் அறக்கட்டளை துவக்கப்பட்டு உள்ளது. கருமலை பகுதியில் இருந்து வெளியூர் சென்ற மக்களுக்கும், கருமலை பகுதியில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவர்களுக்கும் உதவி செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகளும், மருத்துவ உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...