கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் மனைவி உயிரிழந்த நிலையில் அங்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தி மு க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், பா ஜ க தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சிக்கிறது. விவசாயிகள் குறித்து கவலைப்பட முடியாத நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் உள்ளது.
மேலும், அ தி மு க-வின் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணிகள் எவ்வளவு தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் இரு அணிகளுமே டெப்பாசிட் இழக்கும் என்றார்.
இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல்களில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதி உள்ளது குறித்து அவரிடம் கேட்டபோது, இந்தி திணிப்பை எப்போதும் தி மு க எதிர்க்கும் என்றார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், பா ஜ க தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சிக்கிறது. விவசாயிகள் குறித்து கவலைப்பட முடியாத நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் உள்ளது.
மேலும், அ தி மு க-வின் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணிகள் எவ்வளவு தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் இரு அணிகளுமே டெப்பாசிட் இழக்கும் என்றார்.
இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல்களில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதி உள்ளது குறித்து அவரிடம் கேட்டபோது, இந்தி திணிப்பை எப்போதும் தி மு க எதிர்க்கும் என்றார்.