தாராபுரத்தில் 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - பெண் உட்பட இருவர் கைது

தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு சட்ட விரோதமாக புகையிலை பொருள்களை விற்பனைக்கு எடுத்து வந்த சவுதா கனி என்ற பெண்ணையும், முகமது ரஃபீக் என்ற நபரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 12 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தாராபுரம் நகரின் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சவுதா கனி வயது 35, இவரது கணவர் சையது இப்ராகிம். மேலும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் வயது 47 என்ற நபரும் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர். சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண் உட்பட இரண்டு பேரையும் தாராபுரம் காவல் உதவியாளர் சிவராஜ் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருள்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி சட்ட விரோதமாக புகையிலை பொருள்களை விற்பனைக்கு எடுத்து வந்த சவுதா கனி என்ற பெண்ணையும் முகமது ரஃபீக் என்ற நபரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...