தாராபுரம் அருகே குருப்பன் நாயக்கன்பாளையத்தில் இயேசு மீட்பர் ஆலயத்தில் நன்றி வழிபாட்டு விழா நிகழ்ச்சி

குருப்பன் நாயக்கன்பாளையம் கிராமத்தில், தஞ்சாவூர் திருமண்டலம் திருச்சிராப்பள்ளி தென்னிந்திய திருச்சபையின் சார்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சின்னபுத்தூர் சேகரம் இயேசு மீட்பர் ஆலயத்தில் நன்றி வழிபாட்டு விழா நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், சின்னபுத்துர் பஞ்சாயத்துக்குட்பட்ட குருப்பன் நாயக்கன்பாளையம் கிராமத்தில், தஞ்சாவூர் திருமண்டலம் திருச்சிராப்பள்ளி தென்னிந்திய திருச்சபையின் சார்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சின்னபுத்தூர் சேகரம் இயேசு மீட்பர் ஆலயத்தில் நன்றி வழிபாட்டு விழா நிகழ்ச்சி, மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில், வெகு விமர்சியாக நடைபெற்றன.



இந்த நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மறை மாவட்ட தலைவர் பால்ரத்தினம் இறை செய்தி வாசித்தனர். மேலும் இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் டாக்டர் கே. வி.சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு சேகரத் தலைவர் ஜோசப் ரவிச்சந்திரன் வரவேற்பு அளித்து தொடங்கி வைத்தனர்.

இதில் சின்னபுத்தூர், நாரணாபுரம், குருப்பன் நாயக்கன்பாளையம், பஞ்சப்பட்டி, பெரியபுத்தூர், செட்டிபாளையம், பொன்னாபுரம், அம்மாபட்டி ஆகிய சேகரம் பகுதியை சேர்ந்த கிராமங்களில் சுமார் 500க்கு மேற்பட்டோர் திரளாக நன்றி வழிபாட்டு விழாவில் சிறப்பித்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சேகரச் செயலாளர் ஜான்சன்,சேகர பொருளாளர் ஜாய் மெர்சி, ரெவரென்ட் சுமதி ஸ்டெல்லா, ரெவரென்ட் பால் மாணிக்கம், ரெவெரென்ட் ரவிச்சந்திரன் மற்றும் சபை நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...