கடும் வெயிலால் பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி பாதிப்பு – நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஆனைமலை, வடக்கி பாளையம், பக்கோதிபாளையம் போன்ற பகுதியில் உள்ள தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


கோவை: தமிழகத்தின் தென்னை நகரம் என்று அழைக்கப்படும் பொள்ளாச்சியில் பிரதான விவசாயமான தென்னை சாகுபடி அதிக அளவில் விவசாயிகள் செய்துள்ளனர். ஆனால் அண்மை காலமாக கேரளா வேர் வாடல் நோய், பூச்சி தாக்குதல் போன்ற காரணங்கள் தென்னை விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விலை நிலங்களில் உள்ள கிணறுகள் தண்ணீர் இல்லாமலும், நிலத்தடி நீரும் 2 ஆயிரம் அடிக்கு கீழ் சென்றதால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.



மேலும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் ஆனைமலை, வடக்கி பாளையம், பக்கோதிபாளையம் போன்ற பகுதியில் உள்ள தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பச்சை பசேலனு காணப்பட்ட தென்னை மரங்கள் தற்போது கருகி எலும்பு கூடாக மாறியுள்ளது. இந்த காட்சியை கண்டு விவசாயிகள் கடும் வேதனை அடைந்து வருகின்றனர்.

ஒரு சில விவசாயிகள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி தென்னை மரங்களுக்கு ஊற்றி காப்பாற்றி வந்தாலும் தற்போது ஏற்பட்டுள்ள வெயிலின் தாக்கத்தால் தென்னை மரங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளுக்கு நிவாரண வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...