மத்திய அரசுக்கு இணையாக ஓய்வூதியம் வழங்குதல், மாதந்தோறும் மருத்துவத்திற்கு ரூபாய் ஆயிரம் வழங்குதல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், இந்த 13 அம்ச கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி அவரிடம் இருந்து தமிழக முதலமைச்சருக்கு முறையீடாக அனுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அரங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.மதன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் என்.சின்னசாமி, மாநில துணைத் தலைவர் எஸ்.சந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பி.நடராஜன் உள்ளிட்டு 200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.
மேலும், இந்த 13 அம்ச கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி அவரிடம் இருந்து தமிழக முதலமைச்சருக்கு முறையீடாக அனுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அரங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.மதன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் என்.சின்னசாமி, மாநில துணைத் தலைவர் எஸ்.சந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பி.நடராஜன் உள்ளிட்டு 200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.