கோவை மாநகராட்சி சார்பில் சிங்காநல்லூர் சிக்னலிலும் பசுமை பந்தல் அமைப்பு - மக்கள் மகிழ்ச்சி

கண்ணப்பன் நகரை தொடர்ந்து சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷன், வசந்த் அண்ட் கோ அருகே உள்ள சிக்னலிலும் பசுமை பந்தல் இன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கோவை: வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில்,கோவையில் சிக்னல்களில் பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சிங்காநல்லூர் சிக்னலிலும் இந்த பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிவெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது.



இந்த நிலையில் கோவை கடந்த சில ஆண்டுகளாகவே 'ஹாட்டாக' இருந்து வந்தது. இந்தாண்டு இன்னும் உக்கிரமாக 100 டிகிரி -பாரன்ஹீட் வெப்பம் சர்வ சாதாரணமாக கோவை மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு அரசு மற்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர், நீர்மோர் பந்தல்களில் மக்கள் தாகம் தணித்து வருகின்றனர்.

வெயிலில் குறிப்பாக வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சி பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கக்கூடிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல் அமைக்கும் பணியை துவக்கி உள்ளது. கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் கண்ணப்பன் நகர் சிக்னலில் முதல் கட்டமாக இந்த பசுமை பந்தல் அமைக்கப்பட்டது.



முதல் கட்டமாக 10 இடங்களில் இதனை அமைக்க உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்த நிலையில் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷன், வசந்த் அண்ட் கோ அருகே உள்ள சிக்னலில் (சிங்காநல்லூர் சிக்னல்) இந்த பந்தல் தற்போது (மே.4) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...