சமயபுரம் சாலையில் காரை துரத்திய பாகுபலி யானை - நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர்தப்பிய டிரைவர்

சாலையை கடக்க தயார்நிலையில் நின்றிருந்த காரை, சமயபுரம் வழியாக நெல்லி மலை வனப்பகுதிக்குள் செல்ல முயன்ற பாகுபலி என்ற யானை பிளிறியபடி ஆக்ரோஷமாக துரத்தியதால் பரபரப்பு நிலவியது.


கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து இன்று (மே.6) அதிகாலை சமயபுரம் வழியாக நெல்லி மலை வனப்பகுதிக்குள் பாகுபலி யானை செல்ல முயன்றது.



அப்போது, சாலையை கடக்கும் பொழுது அங்கே நின்றிருந்த காரை ஆக்ரோஷமாக பிளிறியபடியே துரத்தியது.

நல்வாய்ப்பாக டிரைவர் காரை இயக்கி முன்னோக்கி சென்றதால் உயிர் தப்பினார்.



அதன் பின்னர் சாவகாசமாக சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற யானையை அப்பகுதி மக்கள் திரளாக நின்று பார்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...