நாயக்கன்பாளையம் மற்றும் கோவனூரில் சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சேதம் - விவசாயிகளுக்கு திமுகவினர் ஆறுதல்

கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, கழக நிர்வாகிகளுடன் இன்று சென்று சூறாவளிக்காற்றில் முறிந்து விழுந்த மரங்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, நாயக்கன்பாளையம் ஊராட்சி, கோவனூரில் நேற்றைய தினம் வீசிய பலத்த சூறாவளி காற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.



இதனை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, கழக நிர்வாகிகளுடன் இன்று (மே.6) நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி, துறை சார்ந்த அதிகாரிகளிடம் முறையிட்டு உரிய இழப்பீடு பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.



இந்நிகழ்வில் நாடாளுமன்ற கழக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.கார்த்திக், கோவனூர் ரவி, சந்துருஜெகவி, திருமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...