உக்கடம், புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்பில் வசிக்கும் மக்களை பாதுகாக்க கோரி ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு

நான்காண்டுகளாகியும் பணிகள் முடிவடையாததால் மக்கள் நீண்ட காலங்களாக தகர குடியிருப்பிலேயே வசிக்கின்ற நிலமை உள்ளதாகவும், கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி ஆகியவை இல்லை எனவும் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்தனர்.


கோவை: கோவை உக்கடம் தெற்கு பகுதியில் வசிக்கின்ற மக்களை மேம்பால பணிகளுக்காக மாநகராட்சி நிர்வாகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்புகளை தகரத்தில் அமைத்து கொடுத்து வசிக்கச் செய்தது.



அதேபோல் வெரைட்டி ஹால் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும் மறுசீரமைப்பதற்காக அங்கு வசிக்கும் மக்களையும், அப்புறப்படுத்தி அருகில் இருந்த விளையாட்டு மைதானத்தில் தகரத்தில் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து மாநகராட்சி நிர்வாகம் வசிக்க செய்தனர்.



இந்த இரண்டு பகுதி மக்களும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் நான்காண்டுகளாகியும் அப்பணிகள் முடிவடையாததால் மக்கள் நீண்ட காலங்களாக இந்த தகர குடியிருப்பிலேயே வசிக்கின்ற நிலமை நீடித்து வருவதாகவும், இங்கு கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி ஆகியவை இல்லை எனவும், மின்சார வசதி அடிக்கடி தடைப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தமிழ் புலிகள் கட்சியினர் தற்பொழுது கோடை வெயில் வாட்டி வருவதால் அம்மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் வசதிகளை ஏற்படுத்தி தருமாறும், அதே சமயம் அவர்களுக்கான குடியிருப்புகளை விரைந்து முடித்து ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த மனுவானது தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் இளவேனில் தலைமையில் அளிக்கப்பட்டது.

Newsletter

Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை அறிவியல் கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் மாணவிகள் முகவர்ணம் ப...

பொள்ளாச்சி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி அண்ணாமலை நகரில் டிக் டாப் என்று வந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் செ...

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...