மக்கள் விரோதபோக்கில் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து கோவை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழர் நலனில் அக்கறை செலுத்தாமலும், தொடர்ந்து தமிழகம் மற்றும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலை கடைபிடித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட கமிட்டியின் சார்பில் அக்கட்சியினர் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர காங்கிரஸ் துணை பொதுச் செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

சாய்பாபா காலனி பகுதியில் மாவட்டத் தலைவர் பி.எம்.ஜி.மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே போன்று சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச் செயலாளர் இ.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

கோவை மாநகர அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாய உழவுக்கு தேவையான கலப்பை, நெல் உள்ளிட்டவற்றை கையில் வைத்துக் கொண்டு, மத்திய அரசு வர்தா புயல் நிவாரணத் தொகையை குறைத்து வழங்குவது, தில்லியில் கடந்த 24 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை அழைத்து பேசாமல் இருப்பது, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டு தமிழர்களை வஞ்சிக்கும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...