உடுமலையில் நடைபெற்ற சாலை விபத்தில் நகராட்சி ஊழியர் உயிரிழப்பு

நகராட்சி அலுவலகத்திற்கு திரும்புவதற்காக மேம்பாலத்தில் இருந்து இறங்கிய போது எதிராக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்டு நகராட்சி ஊழியர் சந்திரசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் மின்கம்பி பணியாளராக பணிபுரிந்து வருபவர் சந்திரசேகரன்(வயது 57). இவர் இன்று பணி நிமித்தமாக நகரப் பகுதிக்குள் சென்று விட்டு உடுமலை மேம்பாலத்தின் வழியாக நகராட்சி அலுவலகத்திற்கு வந்து கொண்டு இருந்தார்.

அவர் நகராட்சி அலுவலகத்திற்கு திரும்புவதற்காக மேம்பாலத்தில் இருந்து இறங்கிய போது எதிராக வந்த மோட்டார் சைக்கிள் சந்திரசேகர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சந்திரசேகரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அதைத்தொடர்ந்து அங்கு வருகை தந்த உடுமலை போலீசார் சந்திரசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பலத்த காயங்களுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து சமூக அலுவலர்கள் கூறுகையில்,வாகன போக்குவரத்து நெருக்கம் மிகுந்த இந்த மேம்பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் காந்தி சதுக்கம் பகுதிக்கு செல்வதற்காக இணைப்பு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் மேம்பாலத்தின் இரண்டு பகுதிகளையும் கடந்து வருகின்றனர்.

அப்போது மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்களும் மேம்பாலத்தில் ஏறுவதற்காக வருகின்ற வாகனங்களும் நிலை தடுமாறி விபத்தில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. அதை உணர்த்தும் விதமாக நேற்று இரவு வயதான தம்பதியினர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் துரிதகதியில் செயல்பட்டதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

ஆனால் இன்று உயிரிழப்பு நிகழ்ந்து விட்டது.இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணமாகும். இனியும் ஒரு உயிரிழப்பு நேருவதற்கு முன்பு மேம்பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் டிவைடர் வைத்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...