உடுமலை நகரப் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 14.797 கிலோ கிராம் அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை வாஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உடுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது உடுமலை நகரப் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கட்டாராம் சவுத்ரி(38), சுரேஷ்குமார்(23), தயாராம் (23), சாந்தாராம்(20), உடுமலை தாலுக்கா உரல் பட்டியைச் சேர்ந்த சுரேஷ்(32) ஆகியோர் கணேஷ், கூலிப், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட 14.797 கிலோ கிராம் அளவிலான போதை வாஸ்துக்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதை வாஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது உடுமலை நகரப் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கட்டாராம் சவுத்ரி(38), சுரேஷ்குமார்(23), தயாராம் (23), சாந்தாராம்(20), உடுமலை தாலுக்கா உரல் பட்டியைச் சேர்ந்த சுரேஷ்(32) ஆகியோர் கணேஷ், கூலிப், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட 14.797 கிலோ கிராம் அளவிலான போதை வாஸ்துக்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதை வாஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.