பவானி ஆற்றில் மின்மோட்டார் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க மாவட்ட வருவாய் துறை கட்டுப்பாடு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானியாற்றிலிருந்து கோவை மாநகரத்திற்கு மட்டுமின்றி திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஊர்களுக்காக 16 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என பெரிய அளவில் அரசு அனுமதியுடன் மின் மோட்டார் மூலம் பவானியாற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இதே போல் பவானியாற்றிலிருந்து விவசாய பாசனத்திற்கு நெல்லித்துறை முதல் சிறுமுகை வரை 200-க்கும் மேற்பட்ட மின் மோட்டார் மூலம் விவசாயிகள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதனிடையே பருவமழை தவறியதால் பவானியாற்றிலிருந்து பவானிசாகர் அணைக்கு செல்லும் தண்ணீர் தடைபட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நீர்நிலை மேலாண்மையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த அறிக்கையைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு பகுதியில் விவசாய பாசனத்திற்கு செல்லும் மின் மோட்டார்கள் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் விவசாயிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில், தமிழகத்தில் 32 மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

2047 கோடி ரூபாய் வறட்சி நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு 184 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் ஆதாரத்தை பேணிக்காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாலும் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடி நீர் ஆதாரமாக பவானி ஆறு விளங்குகிறது. ஆகவே இப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். வாரத்தில் 3 நாட்கள் மின் மோட்டார் மூலம் பவானியில் இருந்து நீர் எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

இதற்கு விவசாய சங்க துணைத்தலைவர் ராஜேந்திரன் பதிலளித்து பேசினார். பின்னர் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன முழுக்கங்களை விவசாயிகள் எழுப்பினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...