மேட்டுப்பாளையம் அருகே எரிந்த நிலையில் பிணம்- காவல்துறையினர் விசாரணை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மாதேஸ்வரன் மலையருகே ஆட்டோ நகர் பகுதியில் ஆடு மேய்பதற்காக வந்த பெண் அங்குள்ள மரத்தின் அடியில் எரிந்த நிலையில் பிணம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து, காரமடை காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காரமடை போலீஸ் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், கோவை மாவட்ட எஸ்.பி. ரம்யபாரதி, பொறுப்பு டி.எஸ்.பி. குணசேகர் ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து, காவல்துறையினர் தெரிவிக்கையில், 80 சதவிகிதம் எரிந்த நிலையில் இருக்கும் இந்த சடலம் பெண்ணாக இருக்கலாம் என்றும், வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டுவந்து எரித்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், எரிந்த நிலையில் பிணத்தை எடுத்து வந்த வாகனத்தின் டயர் தடயம் மற்றும் தனித் தனியே வெவ்வேறு இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட எரிந்த உடலின் கால்கள் ஆகியவற்றைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...