கோவை கிராமப்பகுதியில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

கோவை மாவட்டம் சோமனூர் அருகேயுள்ள இராமாச்சிபாளையம் பகுதியில் புதிதாக மதுபானக்கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து, கிராமப்பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகாமையில் மதுபானக்கடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், இராமாச்சிபாளையம் பகுதியில் உள்ள கோவை- சூலூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த மறியலின் போது, மதுபானக்கடை அமையவுள்ள சாலையில் பள்ளிகள் மற்றும் கோவில்கள் இருப்பதால் அவ்வழியே செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் எனவும், குடியிருப்புகளுக்கு அருகே மதுபானக்கடை அமைக்கப்பட்டால் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறிய பொதுமக்கள், அப்பகுதியில் புதிதாக மதுபானக்கடை அமைக்க கூடாது என வலியுறுத்தினர்.

இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தி மதுபானக்கடை அமைக்கப்படாது என உத்திரவாதம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல் துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டம் காரணமாக கோவை- சூலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை கிராமப்பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...