தாராபுரம் அருகே கோவிலுக்கு சென்ற டாட்டா ஏஸ் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் படுகாயம் - மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

மூலனூர் அருகே பட்டுத்துறை என்ற இடத்தில் உள்ள மலையாள கருப்பண்ணசாமி கோவில் விழாவிற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி 19 பேர் காயமடைந்தனர். மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூரை அடுத்த துலுக்கவலசு அருகே கட்டுப்பாட்டை இழந்த டாட்டா ஏஸ் வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.



மூலனூர் அருகே உள்ள பட்டுத்துறை என்ற இடத்தில் மலையாள கருப்பண்ணசாமி கோவில் விசேஷத்திற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டாட்டா ஏஸ் வாகனத்தில் கோவிலுக்கு வந்து கொண்டிருந்த வழியில் எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் (56), ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சத்யா (14), அதே பகுதியைச் சேர்ந்த மணிமேகலை (35,) நாகரத்தினம் மார்க்கம்பட்டி, மாரியம்மாள் (36), செல்வபிரியா (13), ஈஸ்வரி வயது 39, மற்றொரு ஈஸ்வரி வயது 30, பொட்டியம்மாள் (55) இறந்தவர், லட்சுமி வயது 47, சுப்பிரமணி 60, பழனியம்மாள் (70) ஆகியோர் காயம் அடைந்தனர்.



காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 12-நபர்களை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், மீதமுள்ள 8- நபர்களை வெள்ளகோவில் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மூலனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...