இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வலியுறுத்தியும், பல்கலைக்கழகங்களில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் பதாகைகளை ஏந்தியபடி கோவை BSNL அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: இஸ்ரேல் பாலஸ்தீன போரில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் உள்ள மாணவர்கள் போராடி வருகின்றனர்.



குறிப்பாக கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்ட்வார்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் போராடக்கூடிய மாணவர்கள் மீது அமெரிக்க காவல்துறை கொடூரமாக தாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இந்த போராட்டத்தில் போராடக்கூடிய மாணவர்களுக்கு ஆதரவாகவும், உடனடியாக இஸ்ரேல் பாலஸ்தீன போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து மாநில முழுவதும் SFI அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை BSNL அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இஸ்ரேல் பாலத்தீன போரை நிறுத்த வலியுறுத்தியும், பல்கலைக்கழகங்களில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...