மழை வேண்டி வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் சிறப்பு பூஜை

இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டாக அமர்ந்து சிவநாமம் மற்றும் மந்திரங்கள் ஓதி கூட்டு பிராத்தனை செய்தனர். பின்னர், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, தேங்காய், பழங்கள் மற்றும் பூமாலை உள்ளிட்டவற்றை கொடுத்து மழை வேண்டி விருந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்தனர்.


கோவை: கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதற்காக கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பாக மழை வேண்டி சிறப்பு பூஜை மற்றும் கூட்டு பிராத்தனை நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிக்கு கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமை தாங்கினார். இந்த பூஜையில் கலந்துக்கொண்டவர்கள் கூட்டாக அமர்ந்துசிவநாமம் மற்றும் மந்திரங்கள் ஓதி கூட்டு பிராத்தனை செய்தனர். தொடர்ந்து வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, தேங்காய், பழங்கள் மற்றும் பூமாலை உள்ளிட்டவைகளை கொடுத்து விருந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இந்த சிறப்பு பூஜையில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்திக், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன், மாவட்ட பொறுப்பாளர்கள் படையப்பா, செல்வம், அசோக், முருகானந்தம், முருகன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...