குன்னூரில் சாலை விபத்தில் மாணவர் பலி

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்- விஜி தம்பதியினரின் மகன் தர்சன். தற்போது நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு தேர்வினை எழுதியுள்ளார். 

இந்நிலையில், இன்று இருசக்கர வாகனத்தில் குன்னூர், காந்திபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வளைவில் திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி இவரது வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய தர்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றார்.



மேலும், இவ்விபத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த தம்பதியினருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர்கள் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர் தர்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், உயிரிழந்த மாணவர் தற்போதே 10-ம் வகுப்பு தேர்வு எழுதிள்ளதால் அவருக்கு 15 முதல் 16 வயதே இருக்கும். அவரிடம் வாகனம் ஓட்டுநர் உரிமம் இல்லை. விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகிறோம்' என தெரிவித்தனர்.



பள்ளி விடுமுறை நாட்களில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தங்களது விடுமுறை நாட்களை கழிக்க வாகனங்களில் அவ்வப்போது வெளியே செல்ல விரும்புகின்றனர். அவ்வாறு வாகனத்தை இயக்க வேண்டும் என்றால் 18 வயது பூர்த்தியடைந்து வாகன ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும் என்பதை அவர்கள் கடைபிடிப்பது இல்லை. இதனால், ஏராளமான சாலை விபத்துகள் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது தனி கவணம் செலுத்துவதன் மூலம் இவ்வாறான உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...