பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே நிர்வாக இயக்குனர் அனிருதன் கைது


சென்னையில் பல்வேறு இடங்களில் நில மோசடியில் ஈடுபட்டதாக பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே நிர்வாக இயக்குநர் அனிருதன் உள்பட 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்டே, கோவை, பெங்களூர், கொச்சி மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனம், சென்னை பள்ளிக்கரணையில் வீடு கட்டித்தருவதாகக் கூறி 20 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவின் நில மோசடி தடுப்புப் பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து, காசா கிராண்டே நிறுவன நிர்வாக இயக்குநர் அனிருதனை கைது செய்த போலீசார், சென்னை எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், சென்னை முகப்பேரில் இயங்கிவரும் திரு பிரமோட்டர்ஸ் நிறுவன அதிபர் குமார், வீட்டுமனை வாங்கி தருவதாகக் கூறி 200-க்கும் மேற்பட்டவர்களிடம் 3 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாகவும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, திரு பிரமோட்டர்ஸ் அதிபர் குமாரையும் கைது செய்து மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...