உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், பழவகைகளை வழங்கினார்.
கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக பெரிய கடைவீதி பகுதிக்கழகம்-1, 81வது வட்டக் கழகம் சார்பில், இன்று (மே.8) உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், பழவகைகளை வழங்கினார்.

81வது வட்டக் கழகச் செயலாளர் டவுன் பா.ஆனந்தன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், கழக தீர்மானக்குழு இணைச் செயலாளர்பி.நாச்சிமுத்து, கழக தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா. செல்வராஜ், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

81வது வட்டக் கழகச் செயலாளர் டவுன் பா.ஆனந்தன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், கழக தீர்மானக்குழு இணைச் செயலாளர்பி.நாச்சிமுத்து, கழக தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா. செல்வராஜ், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.