கோவையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 2.5 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்


தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கோவையில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக தகவல் வந்ததையடுத்து பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இன்று ஆர்.ஜி.தெரு, தாமஸ் தெரு உள்ளிட்ட நான்கு பகுதிகளில் குட்கா பொருட்கள் அதிகளவில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குட்கா, பான்மசாலா அதிகளவில் பதுக்கிவைத்திருப்பது கண்டறியப்பட்டது.



இதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் விஜய் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது கோவையில் பிடிபட்டுள்ள சுமார் 2.5 டன் எடையுள்ள இந்த புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாகவும் பொள்ளாச்சி உள்ளிட்ட கோவை மாநகரத்தில் புறநகர் பகுதிகளில் இருந்தும் இதுபோன்ற புகையிலைப் பொருட்கள் கோவைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுகிறது. 

கடந்த காலங்களில் புகையிலைப் பொருட்கள் கடத்தியவர்களே தற்போதும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குற்றச் செயலில் ஈடுபட்டுவருவோரை தொடர்ந்து தேடி வருகிறோம். 



மேலும், பேருந்துகள் மூலம் புகையிலைப் பொருட்கள் கடத்துவதை தவிர்க்க வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள், ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களிடமும் இதுகுறித்து அறிவுரை வழங்கியுள்ளோம்" என தெரிவித்தார்

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...