வால்பாறை அருகே நெடுங்குன்றத்தில் யானை தாக்கியதில் ரவி என்பவர் உயிரிழப்பு

உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு நெடுங்குன்றம் பழங்குடி கிராமத்திற்கு வனப்பகுதி வழியாக இரவு நேரத்தில் நடத்து சென்றபோது குட்டியுடன் வந்த யானை தாக்கியதில் ரவி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது மழை இல்லாததால் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதி அருகே தண்ணீர் குடிக்க வந்து செல்கின்றன.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் பகுதியில் சுமார் 30 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். வனப்பகுதியில் வாழும் இவர்கள் உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக வால்பாறை வந்து செல்வது வழக்கம். நேற்று இரவு ரவி வயது 54 என்பவர் மற்றும் அவரின் உறவினர்கள் மூன்று பேர்கள் மொத்தம் நான்கு பேரும் வால்பாறை பகுதிக்கு வந்து உணவுப் பொருட்கள் வாங்கி விட்டு இரவு எட்டு முப்பது மணி அளவில், வில்லோனி எஸ்டேட் அரசு பேருந்தில் சென்று, அங்கிருந்து நெடுங்குன்றம் பழங்குடி கிராமத்திற்கு வனப்பகுதி வழியாக நடந்து சென்றுள்ளனர்.

அப்பொழுது கிராமத்தின் அருகே வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய 2 காட்டு யானைகள், இவர்களை விரட்டி உள்ளது. அப்பொழுது மூன்று பேர் மட்டும் யானையைப் பார்த்து ஓடிய நிலையில் ரவி என்பவர் ஓட முடியாமல் சென்று உள்ளார்.

அப்போது, அவரை காட்டு யானை தாக்கி அவரை கொன்றது. அருகில் உள்ளவர்கள் சத்தம் போட்டு காட்டு யானையை அப்பகுதியில் இருந்து விரட்டினர்.



இது குறித்து தகவல் அறிந்த வால்பாறை காவல்துறையினரும், வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினரும் நெடுங்குன்றம் செட்டில் மெண்டு பகுதிக்கு சென்று ரவியின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வனவிலங்கு தாக்கி பலியானவரின் குடும்பத்தினருக்கு முன் பணமாக 50 ஆயிரம் ரூபாயை வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் வழங்கினார். வனப்பகுதியில் யானை தாக்கி நபர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...