உடுமலையில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி துவக்கம் - 24 அணிகள் பங்கேற்பு

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் காந்திகிராமம் பல்கலைக்கழக அணியும், தாராபுரம் கூடைப்பந்து அணியும் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 80-82 என்ற புள்ளிகள் கணக்கில் காந்திகிராமம் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உடுமலை கூடைப்பந்து அகடாமி சார்பில் மாநில அளவிலான கூடை பந்து போட்டி இன்று துவங்கியது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் காந்திகிராமம் பல்கலைக்கழக அணியும், தாராபுரம் கூடைப்பந்து அணியும் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 80-82 என்ற புள்ளிகள் கணக்கில் காந்திகிராமம் பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.



இரண்டாவது போட்டியில் கொங்குநாடு கூடைப்பந்து அணியும், பொள்ளாச்சி கூடை பந்து அணியும் மோதின. இதில், 51- 61 என்ற புள்ளி கணக்கில் பொள்ளாச்சி கூடைப்பந்து கழகம் அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ராயல் கூடை பந்து கழகம் அணியும் வத்தலகுண்டு கூடை பந்து அணியும் மோதியது.

இதில் 76 -67 என்ற புள்ளி கணக்கில் ராயல் கூடை பந்து கழகம் அபார வெற்றி பெற்றது முதல் நாள் துவக்க விழா போட்டிகளில் திருப்பூர் மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் ரகுகுமார், யூகேபி முத்துக்குமாரசாமி, ஆர்.விஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி ஜூலியா சந்தோஷ், உடுமலை மார்டூரி வசந்தகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், உடுமலை கூடைப்பந்து கழகம் விஜயபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...