தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறையின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் 20ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் மாணவர்களுக்கு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துகுடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இதே போல் பெண் வீராங்கனைகளுக்கு ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோயில், பெரம்பலூர், தேனி, புதுகோட்டை, தருமபுரி, சென்னை, நாமக்கல் ஆகிய இடங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
இவ்விடங்களில் உள்ள விடுதிகளில் தங்கி பயிற்சி பெற மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்களிடம் பெற்று கொள்ளலாம் என அரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், இளைஞர் நல அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்பிக்க இறுதி நாள் வரும் 20ம் தேதி என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் மாணவர்களுக்கு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துகுடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இதே போல் பெண் வீராங்கனைகளுக்கு ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோயில், பெரம்பலூர், தேனி, புதுகோட்டை, தருமபுரி, சென்னை, நாமக்கல் ஆகிய இடங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
இவ்விடங்களில் உள்ள விடுதிகளில் தங்கி பயிற்சி பெற மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்களிடம் பெற்று கொள்ளலாம் என அரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், இளைஞர் நல அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்பிக்க இறுதி நாள் வரும் 20ம் தேதி என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்