கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசாருக்கு முதலுதவி செய்வது குறித்து பயிற்சி வகுப்பு

மாரடைப்பு, சாலை விபத்து போன்ற நிகழ்வுகளின் போது உடனடியாக பொது மக்களுக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றுவதோடு அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வரை அனைத்து பயிற்சிகளும் காவலர்களுக்கு வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம் வாரம் ஒரு முறை என நான்கு வாரங்கள் நடைபெற உள்ளது.



அதன்படி கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று (மே.9) நடைபெற்ற முதலுதவி பயிற்சி முகாமில் ஆண், பெண் என சுமார் 180 க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.



அந்த காவலர்களுக்கு தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. குறிப்பாக மாரடைப்பு, சாலை விபத்து போன்ற நிகழ்வுகளின் போது உடனடியாக பொது மக்களுக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றுவதோடு அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வரை அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டது.



அண்மையில் மாநகர ஆயுதப்படையில் புதிதாக காவலர்கள் இணைந்துள்ளதால், அவர்கள் பயன் பெறும் வகையிலும், அவசர காலத்தில் எவ்வாறு விரைந்து முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...