கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசாருக்கு முதலுதவி செய்வது குறித்து பயிற்சி வகுப்பு

மாரடைப்பு, சாலை விபத்து போன்ற நிகழ்வுகளின் போது உடனடியாக பொது மக்களுக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றுவதோடு அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வரை அனைத்து பயிற்சிகளும் காவலர்களுக்கு வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம் வாரம் ஒரு முறை என நான்கு வாரங்கள் நடைபெற உள்ளது.



அதன்படி கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று (மே.9) நடைபெற்ற முதலுதவி பயிற்சி முகாமில் ஆண், பெண் என சுமார் 180 க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.



அந்த காவலர்களுக்கு தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. குறிப்பாக மாரடைப்பு, சாலை விபத்து போன்ற நிகழ்வுகளின் போது உடனடியாக பொது மக்களுக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றுவதோடு அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வரை அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டது.



அண்மையில் மாநகர ஆயுதப்படையில் புதிதாக காவலர்கள் இணைந்துள்ளதால், அவர்கள் பயன் பெறும் வகையிலும், அவசர காலத்தில் எவ்வாறு விரைந்து முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...