கோவையில் பருவமழையை எதிர்பார்க்காமல் வந்த பெலிகன் பறவைகள்!

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் பருவ மழைக்காலங்களில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் இந்திய நாட்டிலுள்ள பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பல்வேறு வகையான பறவைகள் தமிழகத்திற்கு வருகின்றன.



இவை தவிர, வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் தமிழ்நாட்டின் பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவைகள் பெருமளவில் இங்கு வருகின்றன. இங்கு வரும் பறவைகள் நான்கு மாத காலம் வரை தங்கியிருப்பதுடன் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து அவற்றுடன் திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

அதில் குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து வரும் பறவைகளில் அதிக எடை கொண்ட பெலிகன் பறவைகளே அதிகம். கோவைப் பகுதியில் உள்ள சிங்காநல்லூர் குளம், பேரூர் குளம், முத்தணன் குளம், குறிச்சிக் குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகிய குளங்களைத் தேடி பெலிகன், ஸ்பூன் பில், நாதன்சாளர், டார்டர், பெயிண்டட் ஸ்டார்க், பென்டைல் டக் உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் உணவுக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் இடம் பெயர்ந்து இங்கு வருவது வழக்கமாக கொண்டுள்ளது. 



இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்ற வருடம் பருவ மழை சரியாக பெய்யாததால் கோவையில் உள்ள பல்வேறு குளங்களில் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் வரும் பெலிகன் பறவைகள் வழக்கம் போல் இந்த ஆண்டும் வந்துள்ளது.

கோவையில் உள்ள குளங்களுக்கு அதிக எண்ணிக்கையில் வந்துள்ள பெலிகன் பறவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...