கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 12-வது வார்டுக்குட்பட்ட ராமலிங்கம் காலனி, கே.கே.புதூர் பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதையும், ஜி.கே.சுந்தரம் வீதியிலுள்ள திறந்தவெளி கிணற்றின் அபிவிருத்தி பணிகளையும் மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் கே.ராமைய்யா, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதையும், ஜி.கே.சுந்தரம் வீதியிலுள்ள திறந்தவெளி கிணற்றின் அபிவிருத்தி பணிகளையும் மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் கே.ராமைய்யா, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.