பொள்ளாச்சி அருகே தாத்தூர் பகுதியில் கஞ்சா கடத்தி வந்த தந்தையும் மகனும் கைது - இருசக்கர வாகனம் பறிமுதல்

பீஹார் மாநிலத்தில் இருந்து 8 கிலோ 400கிராம் கஞ்சா மற்றும் 3 கிலோ 100கிராம் போதை சாக்லேட்டை ஆகியவற்றை வாங்கிவந்து கேரளா மாநிலம் கஞ்சிகோடு பகுதிக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


கோவை: பொள்ளாச்சி அடுத்த தாத்தூர் பகுதியில் நேற்று நள்ளிரவு ஆனைமலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு உரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தியதில் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் கஞ்சா மற்றும் போதை சாக்லேட் இருப்பது தெரியவந்தது.



இருவரையும் கைது செய்த ஆனைமலை போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் பீஹார் மாநிலத்தில் இருந்து 8 கிலோ 400கிராம் கஞ்சா மற்றும் 3 கிலோ 100கிராம் போதை சாக்லேட்டை உள்ளிட்டவை கேரளா மாநிலம் கஞ்சிகோடு பகுதிக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட தந்தை முகம்மது சஹாப்தின் மற்றும் அவரது மகன் ஆரிப் ராஜா ஆகிய இருவர் மீதும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையை ஆனைமலை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். முகம்மது சஹாப்தின் மீது கோவை கா.கா., சாவடி காவல்நிலையதில் 2007ஆம் ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...